Monday, June 8, 2009

தெய்வமாய் வாழ்ந்திடு.

உணர்வுகள் கூடத் தவறுகள் செய்யா
நிலையை அடைந்திடு
உனக்கு நீயே, உன்னில் நீயே
தெய்வமாய் வாழ்ந்திடு.

மண்ணும், விண்ணும், காற்று. நீர், நெருப்பும்
கடவுளாகுமா?
உன்னில் உன்னைக் காணத்தவரின் - அது
பிறர் குற்றமாகுமா?

எங்கும் இல்லை இறைவன் - அவன்
நம்முள் இருக்கிறன்
நம்முள் இருப்பதை அறியா நாம்தான்
தினம் தேடித் தொலைகிறோம்.

தீயிட்டுச் சாம்பல் ஆகுமுன்பாக
தீயோர் மனதைத் திருத்துங்கள்...
மண்ணிட்டு மூடி மண்ணாகும்முன்பாக
மனித மனங்களை வெல்லுங்கள்...

முஹம்மது இக்பால். M
27/02/2009 அன்று எழுதியது